News Update :

முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி

width="200"



வாழ்வில் ஒரு முறையேனும் முதுகுவலி வராதவர் என்று நம்மில் யாருமில்லை. ஆதி மனிதன் இரட்டை கால்களால் நேராக  நிற்க முயன்ற போதே முதுகுவலியையும் சேர்த்துக் கொண்டான். இத்தகைய பொதுவான பிரச்சனையான  முதுகுவலி, முப்பது  சதவிதம் பேருக்கு சாதாரண  வலி மாத்திரைகள் மற்றும் உடல் பயிற்சிகளினாலேயே சரியாகி விடுகிறது.

10 சதவீதம் பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.  மீதமுள்ள 60 சதவீதத்தினர் சாதாரண வலி மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொண்டு வாழ்நாளில் புதிய புதிய நோய்களை வரவழைத்து கொள்கின்றனர். இவர்கள், எதை உண்ணுவதால் பித்தம் தீரும் என்ற  நிலைக்கு தள்ளப்பட்டு உடன் இருப்போர் சொல்வதையெல்லாம் கடை பிடிக்கின்றனர்.

மனித முதுகெலும்புக் கூட்டின் அமைப்பு:

இது 33 வளையம் போன்ற  சிறுசிறு எழும்புகளை ஒன்று மேல் ஒன்றாக அடுக்கி வைத்ததை போன்ற அமைப்பு. இது நூல் பிடித்ததைப் போல் நேராக இல்லாமல், தேவைக் கேற்ப  கழுத்து பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் முன்புறம் வளைத்தும்  நெஞ்சு மற்றும் கீழ் இடுப்புப் பகுதியில் பின்புறம் வளைந்தும் காணப்படும்.

இந்த பாதுகாப்பான எலும்பு கூட்டு தொடரின் உள்ளே  தான் தண்டு வடம் அமர்ந்து கொண்டு மூளையில் இருந்து கை, கால் மற்றும் இதர உறுப்புகளுக்கு  நரம்புகளை  எடுத்து செல்கிறது. இந்த எலும்பு தொடரின் இரு பக்கத்திலும் உள்ள துளைகள் வழியாக  நரம்புகள் வெளியேறுகின்றன. 

இந்த முதுகெலும்பு தொடரில் எலும்புகள் ஒன்று மேல்ஒன்று இணைய  முக்காலி போன்று மூன்று இணைப்புகள் உள்ளது. முன்புற இணைப்பாக இரு எலும்புகளுக்கு இடைவெளியாக  டிஸ்க் எனப்படும் நடுப்புற  தட்டு அமைந்து,  உடம்பின் அதிர்ச்சியை  உட்கிரகிக்கிறது. பின்புறமாக பேஸட் என்ற இரண்டு  இணைப்புகள் உள்ளது.

முதுகு வலிக்கு மூல காரணம்:

முதுகுவலியானது முதுகெலும்பின் தொடர்ச்சியிலோ,  எலும்புகளை சுற்றியுள்ள தசைகள் மற்றும் ஜவ்வுகளிலோ  அல்லது முதுகெலும்புகளை  பின்னிப் பிணைத்திருக்கும் தண்டு வட நரம்புகளிளோ தான் உற்பத்தியாகின்றன.




 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.