பெண்கள் திருமணத்தின் போதோ, கர்ப்பமாக இருக்கும் போதோ எவ்வளவு தான் ஒல்லியாக இருந்தாலும், பிரசவத்திற்குப் பின் அவர்கள் அதேப் போல் இருப்பதில்லை. கர்ப்பமாக இருக்கும் போது, அடிக்கடி உடல் எடையை பார்க்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் குண்டாவதைத் தடுக்கலாம்.
ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது கண்டதை சாப்பிட்டு, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறோம். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, நிறைய பசி எடுப்பது போல் தோன்றும். கண்ணில் பார்ப்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தோன்றும். அதிலும் சில நல்ல உணவுகளான சாக்லேட், வறுத்த மற்றும் காரமான உணவுகள்.
ஆனால் இவை அனைத்தும் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் இவை ஆரோக்கியம் தான், சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். ஏனெனில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். ஆகவே அவற்றை சாப்பிட்டு மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை சற்று குறைவாக வைத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, சாதாரண எடையை விட 12-14 கிலோ அதிகமாக இருக்கும். சிலசமயங்களில் 12 கிலோ கூட எடை இல்லாமல் இருக்கும். ஏனெனில் அது குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்தது. குழந்தை வளர வளர தான் எடை அதிகரிக்கும். அதிலும் முதல் மூன்று மாதங்களில் 3 கிலோ எடை அதிகரிக்க வேண்டும்.
அதன் பிறகு வாரத்திற்கு 1/2 கிலோ முதல் 1 கிலோ வரை அதிகரிக்கும். ஆனால் இது சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஆனால் இது மாதிரி எடை கூடினால் நல்லது. எப்போதும் ஆரோக்கியளளறு உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான், எப்போதுமே ஒரு நல்ல தோற்றத்தில் இருக்க முடியும். மேலும் எந்த காரணத்தைக் கொண்டும், வீட்டு வேலையை செய்வதை நிறுத்திவிட வேண்டாம். அதற்காக மிகவும் கடுமையான வேலையையும் செய்ய கூடாது