News Update :

முதுகெலும்பினால் ஏற்படும் பிரச்சினைகள்

width="200"



வயதானாலே எலும்பு தேயும் என்பது தெரிந்ததே. இது முதுகெலும்பு தொடர்ச்சியிலும் ஏற்படுகிறது. இதனால் மட்டுமல்லாது மரபு வழி எலும்பு நோய்களாலும் முதுகில் அடிபடுவதாலும், 50 வயது நெருங்கியவர்களை ஸ்பைனல் கேனல் ஸ்டினோசிஸ் என்ற பிரச்சினை தாக்குகிறது.

இதில்  தண்டுவடம் அமைந்துள்ள ஸ்பைனல் கேனல் என்ற நடுத்துவாரமோ அல்லது தண்டு வடத்திலிருந்து பிரிந்து நரம்பு வேர்கள் செல்லும் நியுரல் போரமினா என்னும் பக்கத் துவாரமோ குறுகி போகிறது. இதனால் தண்டு வடத்திலும் நரம்பு வேர்களிலும் அழுத்தம் உண்டாகி இரத்தம் செல்வதை தடை செய்கிறது.

இந்த பிரச்சினையால் பெரும்பாலும் தொடைப் பகுதி, கென்டைக்கால், மற்றும் பெரு விரல்வரை நரம்புகனை பாதித்து நடந்தாலே வலி (Claudication)  ஏற்படுத்தும், இவர்கள் நடக்க பயப்படுவார்கள். இதற்கு அறுவை சிகிச்சையில்லாமல் எபிடூரல் இன்ஜெக்ஷன் கொடுக்கலாம். மேலும் பெர்குடேனியஸ் டிஸ்கெக்டமி செய்து மறு நாளே நடக்க வைக்கலாம்.

சிறுவயதினருக்கு முதுகெலிம்பின் பின் பகுதியில் பார்ஸ் இன்டெர் ஆர்டிகுளோரிஸ் என்ற இடத்தில் குறை ஏற்படுவதை ஸ்பாண்டிலோலைனில் என்கிறோம். இதனால் பின்புறம் சாயும் போது வலி ஏற்படுத்தும்.

முன்புறம் குனியும் போது வலி மறையும். இந்த பிரச்சினையால் ஒரு முதுகெலும்பு அதற்கு கீழ் உள்ள முதுகெலும்பை விட்டு தள்ளி போகும் வாய்ப்புள்ளது. இதை ஸ்பான்டிலோலிஸ் தெஸிஸ் என்கிறோம். இதற்கு தகுந்த பாதுகாப்பு பெல்ட் அணிவது அவசியம்.




 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.