News Update :

மூட்டு வாதம்

width="200"



இந்தியாவில் தற்போது 4 கோடி பேர் மூட்டு வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் 2020-ம் ஆண்டு வாக்கில் இது 6 கோடி பேராக அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை 2 வகையாக பிரிக்கலாம்

(i) அழற்சியால் ஏற்படும் மூட்டு வாதம் (Inflammatory Arthritis)

(ii) அழற்சியில்லாத மூட்டு வாதம் (Non Inflammatory Arthritis)

அழற்சியால் ஏற்படும் மூட்டு வாதத்தில் முதலிடம் பிடிப்பது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்னும் முடக்கு வாதம். பெயருக்கு ஏற்ப ஆளையே  முடக்கிப் போட்டு விடும். இந்த முடக்கு வாதத்தால் முடங்கிப் போய் இருப்பவர்கள் ஏராளம்.

ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூங்கி எழும் போது, கை,  கால் மூட்டுகளில் பிடிப்பு ஏற்படும். (EARLY MORNION STIFFNESS) 3 அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் வீக்கம் இருக்கும். இந்த நோயை கண்டு பிடிக்க பல இரத்தப் பரிசோதனைகள் உள்ளன.

இதில் Anticcp என்பது உறுதி செய்கிறது. சிறிய அளவு பாதிப்பு இருக்கும் போது நோயை மாற்றும் தன்மை வாய்ந்த மாத்திரைகள் கொடுப்போம். அதுவே பாதிப்பு அதிகமுள்ளவர்களுக்கும், மாத்திரைகள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் தற்போது இன்பிலிக்ஸிமேப் எனப்படும் மருந்தை ஊசி மூலம் கொடுக்கும் போது நல்ல பலனை தரும். இதேபோல் சோரியாடிக் ஆர்த்ரைடிஸ், ஆங்கிலோஸிங் ஸ்பாண்டிலைடிஸ், கௌவு ஆர்த்ரைட்டிஸ் போன்றவைகளுக்கும் நல்ல பலனை தரும்.*




 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.