இதயத்திசு இறப்பு இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்படும்போது ஏற்படுகிறது. பொதுவாக இது இதயக்கோளாறு, மாரடைப்பு போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுவது உண்டு. இது பெரும்பாலும் இதயத் தமனியில் தடை ஏற்படுவதால் உண்டாகிறது. இந்த தமனிகளின் சுவர்களில் கொலாஸ்ட்ரால் போன்ற கொழுப்பு பொருட்களும், வெள்ளை ரத்த அணுக்களும் சேர்வதால் அத்தமனியின் உட்புறம் குறுகி விடுகின்றது.
இதனால் இதயத் தசைகளுக்கு குறைந்த அளவு ரத்தமே செல்வதால் ஓட்சிசன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை உரிய காலத்தில் கவனிக்கப்படாவிட்டால் இதயத் திசுக்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படலாம். நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள் ஆகும். இதயம் தசைகளால் ஆனது.
தசைகளின் இயக்கத்தின் மூலமே இதயத்தால் ரத்தத்தை உடலின் எல்லா பாகங்களுக்கும் செலுத்த முடியும். அந்த தசைகளின் இயக்கத்துக்கு ரத்த ஓட்டம் தேவை. அதை தருவது ரத்தக்குழாய்கள். இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு வருகின்றது.
மாரடைப்பின் அறிகுறிகள்:
1. நெஞ்சை இறுக்க கூடிய வலி.
2. வலி வலது, இடது கையின் உள்பக்கமாக பரவல்
3. அதிகம் வியர்த்தல்
4. தலைசுற்றி விழல்
5. மூச்சுத்திணறல் ஏற்படல்.
இதைவிட மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் கொஞ்சம் கொஞ்சமாக குருதிக்குழாய் அடைபடுவதனால் கை உளைதலும் நெஞ்சுவலி ஏற்படலும் ஓய்வு எடுக்கும்போது கை உளைவு இல்லாமல் போதலும் நெஞ்சுவலி இல்லாமல் போதலும் ஏற்படலாம்.
இது பல வருடங்களாக இருக்கும். நீரிழிவு நோயாளர்களுக்கு மேற்படி அறிகுறிகள் ஏற்படாமலேயே சடுதியாக மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பை அதிகப்படுத்தும் நீரிழிவு மாற்ற இயலாத காரணிகள்:
* வயது (40-க்குமேல், வயது ஏற நோய் தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும்)
* பாலினம் (அதிகமாக ஆண்கள் 45-50 வயதுக்கு மேல் சமமான வாய்ப்பு) * பரம்பரையாக வரும் வாய்ப்புகள்
* வாழும் இடம் மாற்ற இயலும் காரணிகள்:
* நீரிழிவு
* அதிக ரத்த அழுத்தம்
* அதீத எடை
* அதிக கொழுப்பு
* புகைப்பிடித்தல்
* அதிகமாக மது அருந்துதல்
* குறைந்த உடல் உழைப்பு, உடல் பயிற்சியின்மை
* மன அழுத்தம